நீயா நானா? - மருத்துவர் மேல் பாய்ச்சல்
நீயா நானா? - மருத்துவர் மேல் பாய்ச்சல்
தொழிலில் உள்ள எல்லா பொறியாளர்களுமே நல்ல பொறியாளர்களா எல்லாருமே நல்ல ஆசிரியர்களா? அது போலத் தான் மருத்துவத்துறையும் அங்குமிங்கும் குற்றம் குறை இருக்கத் தான் செய்கிறது. எனக்குத் தெரிந்து, ஒரு ஐடி கம்பெனியில் பணிக்குச் சேர்ந்த ஒன்றிரண்டு வருடத்தில், ஒரு பையனோ பெண்ணோ ஆன்சைட் வாய்ப்பு கிடைக்குமா என்று தான் பார்க்கிறார்கள். அது அமெரிக்காவுக்கு சேவை செய்ய எல்லாம் இல்லை, பணம் ஈட்டத் தான். மனித உபாதைகளையும் நோய்களையும் குணப்படுத்துவதால் அல்லது உயிரைக் காப்பாற்றுவதால் மருத்துவத்துறைக்கு சமூகத்தில் உயரிய இடமளிக்க வேண்டும் என்ற விவாதத்துக்குள் செல்வதில் எந்தப் பயனுமில்லை.
Medicine is also a profession like others. மேலும் வணிக நோக்கு (அல்லது பொருள் சார்பு -materialism) மிகுந்திருக்கும் காலச்சூழலில், மருத்துவத்துறையிலும் அதன் தாக்கம் இருப்பது இயல்பானதே. பொதுவாக ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்ற இரு தரப்பினரையும் சற்று உயர்வான இடத்தில் நம் சமூகம் பல காலமாக வைத்து வந்துள்ளது. அவர்களின் குறைபாடுகள் சற்று தீவிரமாக பார்க்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியக்காரணம். ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன் அவை இரண்டும் மேன்மை (Nobility என்ற பொருளில்) மிக்க தொழில்களாக, சேவையாக கருதப்பட்டன. இப்போது அது சீரியஸாக கேள்விக்குள்ளாகி வருகிறது, வருத்தமான விஷயம் தான். நிற்க.

மருத்துவத்துறை சார் பிரச்சினைகளை/குறைபாடுகளை ஆராய்ந்து களையவேண்டிய கடமை மருத்துவர்களுக்கும், அரசுக்கும், சமூகத்திற்கும் என்று எல்லாருக்கும் உள்ளது என்பதை உணர்தல் அவசியம். விஜய்டிவியில் சமீபத்தில் ஒளி”பரபரப்பான” ”நீயா நானா” நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்ட விதமும், அதில் நடந்தேறிய Gimmicks-ம் டி.ஆர்.பி எகிறுவதற்கு பயனளித்திருக்குமே அன்றி, அதில் சமூக நோக்கு உள்ளது என்று ஒப்புக் கொள்வது கடினம். மருத்துவத்தொழில் மீது வைக்கப்படும் முக்கியப் புகாரான அலட்சியப்போக்கை (Negligence) கண்டறிய/எதிர்கொள்ள சுமுகமாக முறையில் வழிவகை காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, வேறு விஷயம்.
ஒரு கேள்வி கேட்டு விட்டு எதிர்தரப்பு பதிலை முடிக்கும் முன்னே குறுக்கீடு என்பது, அப்பட்டமான சார்பு தெறிக்கும், அர்னாப் ஸ்டைல் விவாதமேடை, அதனால் துளியும் பயன் இல்லை. மாஸ்டர் ஹெல்த் செக் (MHC) என்பதை விளக்கக் கூட விடாமல், ”மாஸ்டர்” என்ற சொல் இருப்பதால், அது அனைத்து வகையான பரிசோதனைகளையும் உள்ளடக்கிய ஒன்று போலத் தோற்றமளிப்பதாகக் கூறுவது, உளறுதல் அல்லாமல் வேறென்ன? நல்லவேளை, ”மாஸ்டர்” ஹெல்த் செக் என்பதை சரக்கு மாஸ்டர் அல்லது ஹெட்மாஸ்டருக்கு மட்டுமே செய்யவேண்டும் என்று மருத்துவர் மேல் பாய்ந்த சிலபல கனவான்களில் யாரும் சொல்லவில்லை ;-)
மருத்துவர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுவதின் வாயிலாக யதார்த்தத்தில் பிரச்சினைகளை முறையாக அலச முடியுமா, தீர்வை அணுகத்தான் முடியுமா ? தொடர்பில்லாமல் அவரவர் ஏதேதோ பேசுவதை விடுத்து, மருத்துவத்துறை சார்ந்த 3-4 முக்கியப்பிரச்சினைகளை கையில் எடுத்து, இரு தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து, ஆரோக்கியமான முறையில் அவற்றின் தாக்கங்களையும், தீர்வுகளையும் முன் வைப்பதே, சமூகப்பிரச்சினைகளை அலசி ஆராய்வதாகக் “காட்டி”க்கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு அழகு! இதையெல்லாம் மருத்துவத்துறையை விட பல மடங்கு வணிக நோக்கமும், அப்பட்ட சார்பு நிலை பற்றி துளியும் கவலையில்லாத டிவி மீடியாவில் எதிர்பார்க்கலாமா என்று யாராவது கேள்வி கேட்டால் நான் அம்பேல்!
மேற்கூறிய நிகழ்ச்சியில் மருத்துவரை மட்டம் தட்டவேண்டும் என்ற சார்பு நிலையுடன், அதிபுத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு ஆவேசப்படுவதும், ஒரு isolated incident-ஆல் (இன்னும் சிலவும் இருக்கலாம் தான்) பாதிக்கப்பட்டவரை முன்னிறுத்தி ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பையும் காழ்ப்பையும் உண்டாக்கி குளிர்காய்வதும், ’நீயாநானா’ இன்னும் பிரபலம் அடைவதற்கும், கோபிநாத்தின் “சமூகக்காவலர்” இமேஜை செம்மைப்படுத்தவும் நிச்சயம் உதவலாம்! ஏதோ ஒரு கோவை(?) மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் பாதிக்கப்பட்ட அப்பெற்றோருக்கு ”உரிய நீதி” கிடைக்க, கடைசி வரை விஜய்டிவியும், ”நீயாநானா” குழுவினரும் துணை நிற்கப் போகிறார்களா என்று யாராவது கேட்டுச் சொல்லவும்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாலும், சிலபல “நீயா நானா” நிகழ்ச்சிகளில் “அனைத்தும் யாம் அறிவோம்” என்ற தொனியை காண முடிந்தது. மருத்துவருக்கு எதிரான நிகழ்ச்சியில் அத்தொனியும், blatant-ஆன சார்பும் சற்று தாங்கமுடியாமல் இருந்ததால், சுட்டிக்காட்டவேண்டும் என்று தோன்றியது! Master Health Check தேவையற்றது என்று குரல் கொடுத்தது போல, சினிமா தியேட்டர்களில் MRP-க்கு 5-6 மடங்கு விலையில் தின்பண்டங்கள் விற்கப்படும் அநியாயத்திற்கு எதிராகவும் “நீயா நானா” குரல் கொடுத்தால், பொதுமக்களுக்குப் புண்ணியமாப் போகும். மல்டிபிளக்ஸ்களில் சினிமா டிக்கெட்டுக்கும், அங்கு விற்கப்படும் ஜங்க் ஃபுட்ஸ், குளிர்பானங்களுக்கும் சாமானிய மக்கள் அடிக்கடி கொட்டிக் கொடுக்கும் பணத்திற்கு, அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை அடிப்படை உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வது ஒன்றும் அத்தனை மோசமான விஷயமாகத் தோன்றவில்லை.
(அந்த நிகழ்ச்சியில்) எவ்வளவு அராஜகம் பண்ணியிருந்தால், ஒரு டாக்டர் இப்படி (கீழுள்ள லிங்க்கில் சுட்டப்பட்டிருக்கும் ஆடியோ!) பொங்கியிருப்பார் என்று யோசியுங்கள்! One needs to understand that Response will always be proportionate to one's behavior in a TV Show!
20 மறுமொழிகள்:
வாசித்து கருத்து கூறவும், நன்றி.
இப்படியும் கூறுகிறார்கள்.
http://dharumi.blogspot.fr/2014/08/785.html
இப்படியும் கூறுகிறார்கள்.
http://www.nisaptham.com/2014/08/blog-post_20.html
நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் கோபிநாத் அவர்கள் பாய்ந்தது ஒரு ஆவேச செயல் போன்று தான் தோன்றியது எனக்கும்.
மாஸ்டர் ஹெல்த் செக் அப்பில் சேராத பல வியாதிகள் இருக்கின்றன. ஒரு முதியவனுக்கு நேரும் பல வியாதிகள் பற்றி எந்த தகவலும் இந்த மாஸ்டர் ஹெல்த் செக் அப் தராது.
வெறும் ரத்த அழுத்தம், சக்கரை நோய், கொலஸ்ட்ரால், இதய நோய்கள் மட்டுமன்றி,
கான்சர் பற்றிய எந்த முன் முன் எச்சரிக்கையும் இந்த செக் அப்களில் இல்லை.
எந்த அளவுக்கு கோபிநாத் அவர்கள்.
,தனக்கு, ஹ்யூமன் பதாலாஜி பற்றிய .
அறிவு இருக்கலாம் என்று கணித்த பின் , இது போல் சொல்லி இருக்கலாம்.
சுப்பு தாத்தா.
இருந்தாலும் இதையும் படியுங்கள்.
www.subbuthatha72.blogspot.com
//மருத்துவத்துறையை விட பல மடங்கு வணிக நோக்கமும், அப்பட்ட சார்பு நிலை பற்றி துளியும் கவலையில்லாத டிவி மீடியாவில் எதிர்பார்க்கலாமா//
அப்டியெல்லாம் சொல்லப்பிடாது.
//இப்படியும் கூறுகிறார்கள்.
http://www.nisaptham.com/2014/08/blog-post_20.html//
<<
பெரும்பாலான மருத்துவர்களிடம் ஒரு நாளைக்கு நாற்பது டோக்கன்கள்தான்.
அதற்கு மேலாக யாரையும் பார்க்க முடியாது என்றால் பார்க்க முடியாதுதான்.
இதுதான் நிதர்சனம்.
ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
>>
பெரும்பாலான மருத்துவர்கள் பணத்தின் மேல் ஆசைப்பட்டால் ஒரு நோயாளியை பார்க்கும் நேரத்தில் இருவரை பார்த்து இரு மடங்கு சம்பாதிக்கலாம்
ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் பணத்தின் மேல் ஆசைப்படுவதில்லை
தங்களிடம் வருபவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கிறார்கள்
தங்களின் வருமானத்தை விட நோயாளிகளை முக்கியமாக கருதுகிறார்கள்
அதனால் தான் ஒரு நாளைக்கு நாற்பது டோக்கன்கள்தான்.அதற்கு மேலாக யாரையும் பார்க்க முடியாது என்கிறார்கள்
மருத்துவர்கள் பணத்தை முக்கியமாக கருதுகிறார்கள் என்று பொய்யாக கூறித்திரியும் மூடர்களையும், வக்கிரபுத்திகாரர்களையும் செருப்பால் அடித்துள்ளார் வா.மணிகண்டன்
//
ஒரு முறை பைக்கை எடுத்துக் கொண்டு போன போது எதிரில் வந்த குடிகாரரின் மீது மோதிவிட்டேன். கீழே விழுந்து முன்மண்டை கிழிந்து ரத்தம் ஒழுகுகிறது. மணி எட்டரை இருக்கும். மூன்று மருத்துவர்கள் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். ஒருவர் கிளம்பிக் கொண்டிருந்தார். இன்னொருவர் விபத்து என்றால் பார்க்க முடியாது என்றார். இன்னொருவர் வேறொரு காரணம் சொன்னார். கடைசியில் ஒரு மருத்துவர் கட்டுப்போட்டு உதவினார். அவர் நான்காவது மருத்துவர். ஒருவராவது உதவும் மனநிலையில் இருந்தார். இதுதான் உண்மை.
//
ஐயா
நீங்கள் 8 மணி நேரம் வேலை செய்கிறீர்கள்
மருத்துவர் 16 மணி நேரம் செய்யலாம்
ஆனால்
24 மணி நேரமும் அவர் முழித்திருக்க வேண்டும்
நீங்கள் எப்பொழுது சென்றாலும் அவர் தையல் போட வேண்டும்
என்ற உங்கள் எதிர்ப்பார்ப்பு தவறு
அவரிடம் தையல் போடும் உபகரணங்களை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே
இது தான் பிரச்சனை
பிழை உங்களிடம் தான் உள்ளது
மருத்துவரிடம் இல்லை
உங்கள் தவறான எதிர்பார்ப்பினால் தவறு செய்யாமல் சேவை செய்யும் மருத்துவரை குறை கூறுகிறீர்கள்
//
சில மாதங்களுக்கு முன் ஒரு மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தேன். சின்ன நோவு. ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார். நோயின் நிலை குறித்து எனக்கு விளக்கம் சொல்லி விட்டு, மருந்துச் சீட்டு எழுதிக் கொடுதார். அவருடைய பீஸ் எவ்வளவு என்று கேட்டு, கொடுத்தேன். பணத்தை வாங்கி உள்ளே போட்டவர் மேசையின் மேலிருந்த சில உறைகளில் ஒன்றைத் தேடி எடுத்து என்னிடம் கொடுத்தார். ’என்ன இது?’ என்றேன். ’நீங்கள் ஸ்கேன் எடுத்ததற்காக அவர்கள் எனக்குக் கொடுத்த கமிஷன். வழக்கமாக இதை நான் அவரவர்களிடம் கொடுத்து விடுவேன்’ என்றார்.
இப்படி ஒரு டாக்டர்.
கமிஷன் வேண்டாமென்றால் அதுவும் ஸ்கேன்காரர்களிடமே போய் விடும். அதை வாங்கி நம்மிடமே கொடுப்பதே அவர் வழக்கமாம். அவர் பெயரைச் சொன்னாலும் இந்த நல்ல விஷயம் முடிவுக்கு வந்து விடும்.
//
Good Fiction
அதாவது மருத்துவர் ஸ்கேன் எழுதி கொடுக்கும் போதே இந்த நோயாளி கண்டிப்பாக ஸ்கேன் எடுத்து விடுவார், அதுவும் அதே நிலையத்தில் எடுத்து விடுவார் என்று உறுதியாக நம்பி பணத்தை கொடுத்தாராம்
--
ஒரு வேளை
ஸ்கேன் எடுத்த பிறகு செல்லும் போது பணம் கொடுத்தார் என்றால் கூட அதில் ஒரு லாஜிக் இருக்கும்
--
ஆனால்
சீட்டு எழுதி கொடுக்கும் போதே பணம் கொடுத்தார் என்று கூறுவதில் இருந்தே
இதை எழுதியவரின் நேர்மை தெரிகிறது
யோகன் பாரிஸ்(Johan-Paris)போன்ற நல்லவர்கள் கூட இதையெல்லாம் நம்புகிறார்களா
வாசித்தவர்களுக்கும், கருத்தளித்த நண்பர்களுக்கும் நன்றி.
//பெரும்பாலான மருத்துவர்கள் பணத்தின் மேல் ஆசைப்படுவதில்லை
தங்களிடம் வருபவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கிறார்கள்
தங்களின் வருமானத்தை விட நோயாளிகளை முக்கியமாக கருதுகிறார்கள் //
எல்லா டாக்டர்களையும் தன்னைப் போல் நினைத்து விட்டார் போலும்1
//Good Fiction//
இதை உங்களது ‘வன்மப் பட்டியலில்’ சேர்ப்பேன்.
so sorry about this uncouth comment.
எல்லோரும் சரியாகப் புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேண்.
டாக்டர் ஸ்கேன் எழுதிக் கொடுத்தார். எடுத்தேன். மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்தார். அதன் பின் அவரது பீஸைக் கொடுத்தேன். அதன்பின் அவர் அவருக்குக் கிடைத்த கமிஷனை என்னிடம் கொடுத்தார்.
தனிமடலில் மருத்துவரின் பெயரை அனுப்பட்டுமா?
இதை ‘கதை’ என்று சொல்லி என்னக் கேவலப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
தொழிலில் பக்தி நேர்மை இருப்பது நல்லது. ஆனால் தொழில்காரர்கள் மேல் இவ்வளவு நம்பிக்கை வேடிக்கையாக உள்ளது.
//ஆனால்
சீட்டு எழுதி கொடுக்கும் போதே பணம் கொடுத்தார் என்று கூறுவதில் இருந்தே
இதை எழுதியவரின் நேர்மை தெரிகிறது //
எழுதியதை புரிந்து பின் என் நேர்மைக்கு certificate கொடுங்கள்.
innoru kathai en pathivil serkiraen. Dr. Bruno - pl read that too!!
சிறிது காலத்திற்கு முன்பு சிக்குன்குனியா தாக்கபட்டேன். வீட்டின் அருகில் இருக்கும் மறுத்துவரை அனுகியபோது ஒரு இஞ்ஜக்ஷன் மற்றும் சில மாத்திரைகள் மொத்தமாக ஒரு தொகை. ஆனால் எனக்கு என்ன நேர்ந்தது என தெரிவிக்கவில்லை. தொடர்ந்து சுரமும் வலியும் இருந்ததால் சில வருடத்திற்கு முன்னால் குடியிருந்த வீட்டின் அருகில் இருந்த ஒரு டாக்டரிடம் சென்று காண்பிக்கலாம் முன்பு சிலமுறை அவரிடம் மருத்துவம் பெற்றபோது நன்றாக பார்த்தாரே என அவரை தேடி சென்று பார்த்தேன். அவரும் எனக்குள்ள அறிகுறிகளை கேட்டறிந்து மாத்திரைகளையும் இஞ்ஜக்ஷனையும் அளித்து சுமார் 14வித டெஸ்ட் எடுக்க பணித்தார். அவ்விதமே செய்து கொண்டுபோய் கொடுத்தபோது ஒன்றும் கூறாமல் தொடர்ந்து முதலில் கொடுத்த மாத்திரைகளை தொடரும்படி கூறிவிட்டு எதற்கும் மூட்டுவலி நிபுனர் ஒருவரிடம் ஒபீனியன் வாங்கும்படி கூறி எழுதி கொடுத்தார். என்க்கிருந்த மூட்டுவலி சிக்குன்குனியாவால் தான் என்பதை நன்கு அறிந்தும் இதை செய்தார். ஆனால் நான் அவர் கூற்றுபடியே அவர் எழுதி கொடுத்த மருத்துவரை சென்று பார்த்தேன். அவர் கொடுத்த கடிதத்தை பார்த்துவிட்டு முட்டியெல்லாம் வலிக்குதா என கேட்டுவிட்டு அவரும் ஒரு 10டெஸ்ட் செய்ய எழுதி கொடுத்தார். அப்போதுதான் நான் உணர்ந்தேன் இவர்கள் சும்மாவே நம்மை அலைகழிக்கின்றனர் என. நல்ல முறையில் வைத்தியம் பார்த்தவர் பார்ப்பார் என நம்பி ஏரியா விட்டு ஏரியா சென்ற பின்னரும் அவரை தேடி போய் பார்த்த போது நடந்த ச்ம்பவம் மிகவும் மனதுக்கு வேதனை அளிக்க கூடியதாக இருந்தது. இது பற்றி நன்பர் ஒருவரிடம் கூறியபோது அவர் மூட்டுவலி மருத்துவர் எழுதி கொடுத்த டெஸ்டை எடுத்து போய் கொடுத்திருந்தால் அவர் நரம்பியல் நிபுனருக்கு எழுதி கொடுத்திருப்பார், ஏனென்றால் தனக்கு அப்படி நேர்ந்தது என கூறி வருந்தினார். நீயா நானா நிகழ்ச்சியில் ஏதே ஒரு சம்பவத்தை குறிப்பிடவில்லை. இன்று பத்துக்கு குறைந்தது இரண்டு பேருக்காவது இது போன்ற நிகழ்ச்சி ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. ஆடியோ லிங்கில் ஒரு டாக்டர் பேசி இருக்கிறார் என்பதை நம்ப கடினமாக உள்ளது ஒரு நான்காம் தரமான நபர் பேசியது போல இருக்கிறது.
சிறிது காலத்திற்கு முன்பு சிக்குன்குனியா தாக்கபட்டேன். வீட்டின் அருகில் இருக்கும் மறுத்துவரை அனுகியபோது ஒரு இஞ்ஜக்ஷன் மற்றும் சில மாத்திரைகள் மொத்தமாக ஒரு தொகை. ஆனால் எனக்கு என்ன நேர்ந்தது என தெரிவிக்கவில்லை. தொடர்ந்து சுரமும் வலியும் இருந்ததால் சில வருடத்திற்கு முன்னால் குடியிருந்த வீட்டின் அருகில் இருந்த ஒரு டாக்டரிடம் சென்று காண்பிக்கலாம் முன்பு சிலமுறை அவரிடம் மருத்துவம் பெற்றபோது நன்றாக பார்த்தாரே என அவரை தேடி சென்று பார்த்தேன். அவரும் எனக்குள்ள அறிகுறிகளை கேட்டறிந்து மாத்திரைகளையும் இஞ்ஜக்ஷனையும் அளித்து சுமார் 14வித டெஸ்ட் எடுக்க பணித்தார். அவ்விதமே செய்து கொண்டுபோய் கொடுத்தபோது ஒன்றும் கூறாமல் தொடர்ந்து முதலில் கொடுத்த மாத்திரைகளை தொடரும்படி கூறிவிட்டு எதற்கும் மூட்டுவலி நிபுனர் ஒருவரிடம் ஒபீனியன் வாங்கும்படி கூறி எழுதி கொடுத்தார். என்க்கிருந்த மூட்டுவலி சிக்குன்குனியாவால் தான் என்பதை நன்கு அறிந்தும் இதை செய்தார். ஆனால் நான் அவர் கூற்றுபடியே அவர் எழுதி கொடுத்த மருத்துவரை சென்று பார்த்தேன். அவர் கொடுத்த கடிதத்தை பார்த்துவிட்டு முட்டியெல்லாம் வலிக்குதா என கேட்டுவிட்டு அவரும் ஒரு 10டெஸ்ட் செய்ய எழுதி கொடுத்தார். அப்போதுதான் நான் உணர்ந்தேன் இவர்கள் சும்மாவே நம்மை அலைகழிக்கின்றனர் என. நல்ல முறையில் வைத்தியம் பார்த்தவர் பார்ப்பார் என நம்பி ஏரியா விட்டு ஏரியா சென்ற பின்னரும் அவரை தேடி போய் பார்த்த போது நடந்த ச்ம்பவம் மிகவும் மனதுக்கு வேதனை அளிக்க கூடியதாக இருந்தது. இது பற்றி நன்பர் ஒருவரிடம் கூறியபோது அவர் மூட்டுவலி மருத்துவர் எழுதி கொடுத்த டெஸ்டை எடுத்து போய் கொடுத்திருந்தால் அவர் நரம்பியல் நிபுனருக்கு எழுதி கொடுத்திருப்பார், ஏனென்றால் தனக்கு அப்படி நேர்ந்தது என கூறி வருந்தினார். நீயா நானா நிகழ்ச்சியில் ஏதே ஒரு சம்பவத்தை குறிப்பிடவில்லை. இன்று பத்துக்கு குறைந்தது இரண்டு பேருக்காவது இது போன்ற நிகழ்ச்சி ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. ஆடியோ லிங்கில் ஒரு டாக்டர் பேசி இருக்கிறார் என்பதை நம்ப கடினமாக உள்ளது ஒரு நான்காம் தரமான நபர் பேசியது போல இருக்கிறது.
After Dr. Bruno's accusation that i had given a fiction regarding a doctor who gave me the commission ...
Sorry, tamil font does not work properly now. So in English.
// பெரும்பாலான மருத்துவர்கள் பணத்தின் மேல் ஆசைப்படுவதில்லை.
தங்களிடம் வருபவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கிறார்கள்//
They give very nice medical certificates too for a handsome money. Our class time was between 8 to 12 noon. Between 9-10 I had an internal test – which carries weight in the internal assessment. A student didn’t turn up. Normally I never go for certificates for giving a retest. Not knowing my practice, a student came with a certificate from a govt doctor. He had certified that the boy had chest pain and was treated by him. The poor boy had attended classes in the other three periods. I sent a letter ‘appreciating’ the doctor for his miraculous treatment, which cured the boy’s chest pain within an hour since he was able to attend his classes very immediately.
This may too be considered by my very well educated blogger friend Dr. Bruno as a “fiction”. He can hold on to that since I don’t have any evidence with me now for that incident which took place nearly some 20 or 25 years back.
Good doctors are there. Bad doctors are there. Let's encourage good doctors.
good doctors are there. bad doctors are also there. let us encourage good doctors. Do we do?
Post a Comment